• Recent posts

    திருக்கோயில் வலப்பா - கொடிமரம்

    தாளில் சதுரமாய் நான்முகன் சாயலாய்
    தாளின்மேல் பல்கோணப் பாற்கடலோன் சின்னமாய்
    தாளின் தலையெனவே வட்டமாய் லிங்கமாம்
    தாளில் பணிந்தால் தலையும் --அருளுமே
    தாள்மேல் தலைமேல் உறைசக்தி போற்றியோர்
    தாளதுவும் சேரும் மறுமையிற் செர்க்கமே
    தாளது கூறும் நெறியறிவீர் மாந்தரே
    தாள்மேல் அரிமேல் அரண்மேலுள் - சக்தி
    அவள்தாள் பணிந்தே தரிசிக்க வானம்
    அவளருளால் தாழ்ந்து வசப்படுதல் காணும்
    அவளடியுள் ளீசன் அருள்கிற வாறே
    அவனடியுள் மாலும் பரனும்  -அருள்வர்
    அருள்வர் அவர்தம் துணைவியர் தாமும்
    அருள்வர் அவர்போல் அமரர் அனைவர்
    அருள்வர் அவர்போல் கணங்களும் நாளும்
    அருளுள் கொடிமரத்தைக் காண்.

    #கலிவெண்பா.

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728