• Recent posts

    திருக்கோயில் வலப்பா - நந்தி

    மூலனுக்கு தந்தனன் மூலமே  மந்திரமே
    காலந்தோறும் லிங்கனை காணுதற் போதுமென்று
    காலனை எத்திய காருண்யன் சேவைதனில்
    காலம் தனைகழிக்கும் காளை - இவரன்றோ
    ஈசனின் வாகனமாய் ஈடிலா நல்லுதவி
    நேசத்தின் பால்நமக்கு நேர்பட செய்திடுவார்
    பாசத்தி னாலேநாம் பாவம் குறைத்திடுவார்
    வாசலில் நின்றவாரு பேரன்பு - பொங்கும்
    சிவத்தொண்டு செய்வார் சிவகதி சேர்ப்பார்
    அவரடி பற்றியே அத்தனை வேண்டல்
    அவரருள் பெற்றார் அகிலத்தில் ஓங்க
    தவசிவன் காத்து தயைபுரிவான் - முந்தி
    வணங்குவோம் நாளும் வலிமை பெறவே
    வணங்குவோம் நாமும் வலியன் அருள
    வணங்குவோம் நாமும் வளம்பல சேர
    வணங்குவோம் நந்தியை கண்டு

    multivigarpa venba


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728