• Recent posts

    "கவிஞன் அவன்"

    "கவிஞன் அவன்"

    மெய்யெழுத்தில் உயிர்கொடுத்து மெய்யெழுதி சலித்தவன்;
    உவமையெனும் உத்தம பொய்யெழுதி களித்தவன்!


    ஐங்குணமும் ஆறறிவும் வரமாய் பெற்றவன்;
    ஆயக்கலை தன்னில் அறுபதாவது கலைஞன்!


    ஞானத்தை கொடுத்து நல்லதை விதைத்தவன்;
    கானத்தை பொருத்து நாதத்தை வளைத்தவன்!


    குருவிக்கூட்டில் போற்முழக்கத்தை கொக்கரிப்பவனா கவிஞன்?
    காகமுட்டைக்குள் ஒளிந்திருக்கும் . குயிலிசைக்கும் மொழிப்புனைந்தவன்!


    சமூகத்தை சாடி சாட்டை எடுப்பான்:
    மயிலிறகு குட்டியிடுமென  புத்தககூட்டில் மறைப்பான்!


    இவ்வுலகிற்கு அதன்நியதிப்படி இவன் பைத்தியம்தான்:
    ஆயினும் அவன்பார்வையில் நாமெல்லாம் பைத்தியம்தான்!




    அடுத்த நூற்றாண்டின் கனவுகள் அவனுக்கு உண்டு:
    இன்றைய சமூகத்தின்மீது அக்கறையும் கவலையுமுண்டு!


    வேளைகள் அவனுக்கில்லை ஆனால் பசித்தது;
    உணவுஇல்லை என்றாலும் மொழி இனிதிருந்தது!


    அடுத்த நூற்றாண்டின் மாகவிஞன் அவன்;
    இந்த நூற்றாண்டே நீநகர்ந்து வழிவிடு!


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728