• Recent posts

    இழந்தைப்பழ கிழவி..

    ஆயிரமாம் பேர்கள் உண்டு - அவளுக்கு
    ஆயிரம் பேர்கள் கூட உண்டு
    ஆசை அவளுக்குத் தீண்டாமை - ஆனால்
    அன்பினில் அவள் பேரரசி

    அதிகாலை கதிரவன் சோம்பல் முறிக்கும்
    அந்தவேளை அவள் பணிக்குசெல்வாள் - பலர்க்கு
    அவ்வேளை கனவில் கழிகிறது.

    எளிமை அவள் யாதிலும் - எளிமை
    இழந்தை பழம் போலினிய - எளிமை
    பழம்பெருக்கி பணம்பண்ணும் - பிழைப்பு
    பசிக்கு நிறம் சிவப்பு.

    தேசத்து கொடியதன்  வண்ணம்போல் - பற்பல
    நேசத்து மனிதரது எண்ணம் - ஏழைகிழவி தானே
    ஏமாற்றிவிடலாம் பாவம்பார்க்கலாம் - சுயமரியாதை
    இவர்களின் தந்தைச் சொத்து..
    அவமரியாதை அவர்களின் ஆகசிறந்த தானம்.

    செந்நிறக் கதிரவன் சேய்மடி சாயும்வரை
    அந்நிறக் கரங்கள் தேய்ந்து ஓயும்வரை
    நன்நிலக் கொள்கை தான்கொண்ட பேரளிம்பெண்..

    தினம்தன் வருமானம் பசிக்கு உபகாரம் - போக
    மீதமக் கருணை இல்லத்துக்கு உபயம் - நோகச்
    சேர்த்தது ஊரார் கண்ணுக்கு விரயம்

    தேய்ந்த கரந்தனில் தேயாத தன்னம்பிக்கை.
    ஓய்ந்த வயதிலும் ஓயாத ஓட்டம்
    பள்ளிவாசலில் பிள்ளைகூட்டம் மொய்க்கும்
    பாட்டி பாட்டி எனச்செல்லம் கொஞ்சும் - அத்தருணமதே

    அவள் ஆயுட்கால அறப்பயன் - அத்தருணமதே
    அவளுக்கு அத்தனை பேரப்பிள்ளைகள் - அத்தருணத்திலா
    அவள் பரமனை சேரவேண்டும்? - அத்தருணத்திலா
    அவள் சாலையில் வீழவேண்டும்..

    நெஞ்சம் பதறிட பிள்ளைகளுக்கு வயதில்லை
    கொஞ்சம் துடித்திட உறவினத் துணையில்லை
    தஞ்சம் என்றிடம் சேர்ந்தவர் எவருமில்லை..

    சாலைகள் ரோஜாவனங்கள் தான் - சிலநேரம்
    சாலைகள் தண்டகவனம் தான் - பாவங்கள்
    அதற்கில்லை பார்ப்பதும் இல்லை

    இறந்தவள் யாரோ என்றது சமூகம்
    வாங்கித்தின்ற வாய்க்கு எப்படி வந்ததோ - வார்த்தை
    ஏங்கிச்செத்த கிழவிக்கு புண்ணியம் உதவலையே...

    காத்திருந்து பார்த்தேன் கருணை இல்லத்து - கடவுளை
    சேர்த்தனைத்து சென்றார் தம்மன்னை இவளென்று - தானம்
    செய்திடல் நன்று இறைவன் சொன்னானின்று.
    ..

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728