• Recent posts

    திருக்காணற் பதிகம்

    1- குன்றினை யொத்த குழல்முடி கொண்டனை
    குன்றிலா நன்றும் குழவும் முகத்தோனை
    குன்றதன் மேலே குடிகொண்ட ஈசரை
    குன்றிடா தன்பால் குறையுடையான் கண்டேனே.
    - கலிவிருத்தம்.

    2- கண்டேன் முடியுறை கங்கையும் சந்திரனும்
    கண்டேன் திருநீறும் கண்மூன்றும் புன்னகையும்
    கண்டேன் திருநீல கண்டமும் நாகமும்
    கண்டனன் கொன்றை மலர்சூட னையானே
    -கலிவிருத்தம்.

    3- மலர்சூடர் தம்மொரு மருங்கில் சூலம்
        மலர்சூடர் தம்மிட மருங்கில் உமையும்
         மலர்சூடர் தம்மெழில் மங்கை உடனும்
         மலர்சூடர் நன்மை அருளிட கண்டேனே
    - நிலைமண்டில ஆசிரியப்பா

    4- வார் குடிகொண்ட மாலன் இலட்சுமி
         வார் கடைந்த வானவர் தம்மையும்
          வார் கடந்த வானரன் தானொருங்கு
           வார் அமைந்த வாரினை கண்டேனே
    -- நிலைமண்டில ஆசிரியப்பா

     5- கண்ணெல்லாம் ஈசறென கண்கள் பனித்திட
    எண்ணிலா ஏகனென எண்ணம் மிளிர்ந்திட
    விண்ணின்ற சோதியாய் விண்ணார் தலையெனும்
    எண்ணாகா சித்தனின் எண்ணைந்தை கண்டனே
    - கலிவிருத்தம்

    6- காழ்போல் சுழன்றிடு கால்கொண்டு ஆடினானை
    யாழ்போல் இசைந்திட்டு யாசகம் கேட்டானை
    தாழ்போல் புவியினை தானின்று காத்தானை
    வாழ்நாள் அதனிலே வாழ்த்துவார் கண்டனே.
    - கலிவிருத்தம்

    7- துள்ளுஞ் சிலம்பும் துளிர்வில் வமதும்
    கள்ளுள் கலசமாய் கண்டிலார் தம்முள்
    புள்ளிக் குள்கோடி புள்ளியென உள்ளானை
    உள்ளு ளரணை அறிந்தனார் கண்டேனே.
    - கலிவிருத்தம்

    8- காணார் படைச்சூழ காரிருள் மேனியரும்
    நாணார் துணைச்சூழ நாவலர் பாடிட
    ஆணார் திறமமைந்த ஆகிருதி கொண்டிட
    கோணா தவரைபுவி கோனவரை கண்டேனே.
    - கலிவிருத்தம்

    9- மென்மார் முலையன்னை மென்முகத்தே புன்னகையும்
    தின்மா ரொன்றிட திகம்பரம் தன்னையும்
    என்றன் மனமுறை எம்பிரான் ஈசரை
    கன்றது தாயினை கண்டதெனக் கண்டேனே
    - கலிவிருத்தம்

    10- நன்மையும் தீமையும் நன்னிய நாதனாற்
    சென்னி யதனை செறிவுற கண்டிட
    நன்னிய மார்க்கம் நமசிவாய என்பதை
    இன்னை பகர்ந்தேன் இனியதைநீர் காண்பீரே.
    - கலிவிருத்தம்.

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728