• Recent posts

    ஆசிரியப்பா

    அறுவராய் பிறந்து அன்னையும் அணைத்திட
    அறுமுக மொன்றான ஆறுமுக கந்தனே
    இறைவன் பெற்ற ஞானம்!
    மறைப்பொருள் எனவந்த எம்தமிழ் குமரனே..
    #நேரிசை_ஆசிரியப்பா..

    தேவர்கள் துன்புறு வதைகண்டு காக்க
    சீவகம் காட்டி காத்தகந்தா நீயும்
    வீரமதை கொண்ட வேலுடன்
    சூரவதை செய்த எங்கள் வேலனே.
    #ஆசிரியத்துறை

    வேலொடு விரைந்து சூர்பகை தனைவெல்
    வேலவா திருமகள் மருகா ஈசனுக்கு
    மந்திரப் பொருள் உரைத்த
    சந்திர எழிலே பக்தருக்  கறிவே..




    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728