• Recent posts

    எழுதப்படாத கவிதைகள் 4: காண்பவை மாயம்

    எழுதப்படாத கவிதைகள் 4:
    காண்பவை மாயம்


    காணும் ஞாலத்தே காண்பவை யாவும் மாயம்

    கானல் நீரும், காணும் நீரும் காலங்கடத்தே மாயம்
    கண்ணீரும் , கடல் நீரும் கரைந்தபின்னே மாயம்

    எண்ணமும் , எள்ளல் நிகழாமட்டும் மாயம்
    காயமும், கானமும் காய்ந்துவிட்டால் மாயம்

    ஒலியும் ஒளியும்  ஒழிந்தபின்னே மாயம்
    பாசமும், நேசமும் பொருளிடத்தே மாயம்

    பணிவும், பண்பும் பசியிடத்தே மாயம்
    அன்பும் , அறமும் அறிவிடத்து மாயம்

    திறனும் தீரமும் ஆணவத்தே மாயம்
    துன்பமும் இன்பமும் துணையிடர மாயம்

    தாவரமும் தா வரமும் கடல்கதிரிடத்து மாயம்


    மாயமும் மாயும் என்பதும் ஒரு பொருள் என்பதால்
     மாயும் என்பதும் இங்கே பொருந்தும் படி 
    இருக்கும்.

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728