• Recent posts

    அமாவாசைக் காரணம்

    ஆசை பிள்ளைக்கு சோறூட்டும்
    அன்னைப் பெண்களே
    தோசை சுட்டுக் காத்திருக்கும்
    காதல் இணைவினரே

    பூசைக் கென்னை எதிர்நோக்கும்
    பெருக்கவி காதலரே
    மாசை யேற்று மாண்புரு சேவை
    புரியும் வீதிப்பெண்டிரே

    வாடுகிறீரோ எனையும் காணாது தேடுகிறீரோ
    அன்பர் செல்வங்களே

    சேதி யிதுவே பெண்பால் மதியவள்
    எனக்குமே இன்று
    சேரா நாளே தூரத்து தினமிதே
    நானும் மலர்ந்தலர

    மறுமுறை மலர்ந்திட கூட்டுத் தவநாளே
    தாயினை வேண்டிடு

    ஆமாவாசை இத்தே...

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728