• Recent posts

    தேமாச்சிந்து

    நேயக் காதல்  - சொல்லி
    மாயப் பாவை
    மேயுங் கண்ணில் - என்னை
    ஓயச் செய்தாள்

    தேன்சொல் தன்னைச் - சொல்லி
    யான்கொள் பெண்ணே
    மான்போல் சென்றாய் - மற்றோர்
    யான்போல் நின்றாய்

    யாழ்போல் மீட்ட  - நெஞ்சில்
    ஊழ்செய் காயம்
    வாழ்வாய் வந்தாய் - பின்னே
    தாழ்தான் ஏனோ

    மால்போல் மார்பில் - வைக்க
    வால்போல் வந்தேன்
    கால்போல் நின்னை- தாங்கி
    தோல்போல் காப்பேன்

    வாவி மீனாய் - நீயும்
    ஆவி உள்ளே
    தாவி துள்ளும் - இன்பம்
    தூவி னாயே.

    காற்றை போலக் - காதல்
    ஆற்றும் ஆற்றும்
    ஊற்றை போலக் - உள்ளம்
    மாற்றும் மாற்றும்

    நேற்றில் இல்லை - நெஞ்சத்
    தாற்றில் இன்பம்
    மாற்றும் இல்லை - பெண்ணே
    மாண்புக் காதல்..


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728