• Recent posts

    எழுதப்படாத கவிதைகள் - இரவுராணி.

    இரவுராணி இன்றேனோ இறங்கற்பா எழுதுகிறாள்.. அவள்வேண்டும்
    இறப்பிற்கு இன்னும் இனியநாள் இருக்கிறதே.

    வகையொரு தினம் நிதமொரு மனம் - வந்தவள்
    வனப்பினை சுகித்து வளந்தனை பொழிந்தும்.

    ஏனோ எழுதுகிறாள் எழவுபாட்டு  என்னாச்சி - அவளுக்கு
    மாதசுழற்சியோ மார்க்கெட் போனதோ இல்லையே.

    நேற்றினன் நேயம் நோவுதின் நேயம் - அடப்போ
    கண்ணுக்குள்ள நிக்கும் நெஞ்சுகுள்ள விக்கும்

    காதுகூட விரும்பா கடுஞ்செய்தி என்கிறாள்- என்னவாம்
    காசுகுடுக்கலையோ வந்தவன் என்கிறாள் இன்னொராணி

    வாழ்க்கையென்ன இரவின் செயல் மட்டுமோ - என்றவள்
    வரிவரியாய் எழுதுகிறாள் விழிவழிநீர் சிந்திட

    நாளொரு தினம் தவறாத சபலக்காரி - இன்றேனடி
    இந்தகரும காரியம்எல்லாம் என்றமற்றோர் ராணி

    காலம்முழுக்க கட்டில்தானாடி கன்னடக் கிளியே - நானின்று
    காலைச்சூரியன் பார்த்தேன் வாழ்வின் இன்பமது.

    நெஞ்சுவிம்மும் இறங்கறபா எழுதுபவள் இன்பஞ்சொல்ல - என்னாடியிது
    என்றவள் கைபிடி காகிதம் பிடிங்கயே.

    ஏன்டி இப்படி எழவெடுக்குற எழுதுனாலும் - நாலுநச்சினு
    ஏன்டி அலையிற அடுத்தாளு வரதுக்குள்ள.

    எதுக்குடி நமக்கு கவிதை கருமம் - வேணுமடி
    மற்றொரு காமம் துய்க்குமுன் மனமாற

    அப்படி என்ன சோகம்டி எழுவுபாட்டுக்காரி - எதிர்வீடு
    குழந்தை டெங்கு வந்து செத்துப்போச்சடி.

    அறை மவுனம் தான் நிதர்சனம்..

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728