• Recent posts

    தமிழிற்கு திருப்புகழ் 2.

    ஏவினை நேர்விழி பாடலைக் கொண்டு....

    ஏடினை நாடிய மாமுனி பாடிய
    ஏகனும் விரும்பிடு - மொழியாகும்

    வீணையும் யாழுடன் ஊதுநற் குழலொடு
    பாடிட என்தமிழ் - இனிதாமே

    மாமலை வாழ்ந்திடும் ஈசனும் வேலனும்
    தான்வளர்த் தேத்திய - மொழிதானே.

    மாநிலத் தாண்டிடு மாபெரும் மன்னரும்
    மாபொருள் தந்திட - உவந்தாளே.

    ஏவினை நேர்விழி பாடலைக் கொண்டு....

    ஏடினை நாடிய மாமுனி பாடிய
    ஏகனும் விரும்பிடு - மொழியாகும்

    வீணையும் யாழுடன் ஊதுநற் குழலொடு
    பாடிட என்தமிழ் - இனிதாமே

    மாமலை வாழ்ந்திடும் ஈசனும் வேலனும்
    தான்வளர்த் தேத்திய - மொழிதானே.

    மாநிலத் தாண்டிடு மாபெரும் மன்னரும்
    மாபொருள் தந்திட - உவந்தாளே.

    பாவலர் பாடிட பாமரன் பேசிட
    பாமலர் சூடிய - இளையோளே

    நாடியர் நாவினில் கூடிய சொல்லிசை
    நாதனை ஆண்டிடு - திருமொழியே

    தேடியென் சிந்தையில் தேனமு தாகிய
    தேன்மொழிச் சொல்லென - உறைவோளே..

    பாவலர் பாடிட பாமரன் பேசிட
    பாமலர் சூடிய - இளையோளே

    நாடியர் நாவினில் கூடிய சொல்லிசை
    நாதனை ஆண்டிடு - திருமொழியே

    தேடியென் சிந்தையில் தேனமு தாகிய
    தேன்மொழிச் சொல்லென - உறைவோளே..

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728