• Recent posts

    பாரதி உன் நினைவில்

    அம்பொன்றை எய்திருந்தால் - நின்
    அக்கினி சொல்லால் எரித்திடுவாய் - என்றே
    அறிவிலா காளி நின் அன்பை பெற- அவளும்
    ஆற்றங்கரை நாவல்பழச்சுவையோடு குரங்கிதயம் கேட்ட முதலை போல்- ஆனாள்.

    நல்லதோர் வீணையென நீர் கேட்ட - வரங்கள்
    நல்கிட இயலாது வாழ்வனைத்தும் துன்புறுத்தினாள் - சிவசக்தி
    குசேலனுக்கு அவல்தின்று செல்வமளித்த - கண்ணனனோ
    குருங்கண்ணாலும் நினை பார்க்காமலே போய்விட்டான்.

    இன்று உன் கவித்திறனை கொண்டாடுபவர் பலர் - ஆனால்
    அன்று அரைவயிற்று சோற்றுக்கு யாருமில்லை - மண்ணும்
    இமயமும் எங்கள் மலையென்றாயே- கடந்த
    இந்திய விடுதலை நாளில் உனைப்பற்றி பேசக்கூட யாருமிலை.

    நின்று சிரித்து நிகண்டு படைத்த குள்ளசாமி - சொன்ன
    நித்திய சூத்திரங்களை உலகுறைத்தாயே - பின்பு
    நீர்தான் ஏன் போதைக்கு அடிமையானாய்.

    அன்பிற்குறிய காளியோ யானையனுப்பி தாக்கினாள் - அண்ணலே
    அந்ததுயரத்திலேயே நோயுற்று மடிந்தாய். - ஆயினும்
    அக்கினி குஞ்சும் புதுமைப்பெண்ணும் இன்றும் - நின்புகழ்
    ஆகாயமாய் விரிய காக்கின்றனர்.

    மீண்டும் ஒருநாள் கர்த்தரை போல் - நீயும்
    மீண்டு வருவாய் என நம்பியே. - தாய்தமிழ்
    மீளாத்துயரை மறைக்கிறது - அல்லேல்
    மீச்சிறு அக்கினி குஞ்சாய் நானும் உளேன்.


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728