• Recent posts

    கிருஷ்ண காவியம்

    பிறந்ததும் வேறிடம்
    வளர்ந்ததும் வேறிடம்
    கம்சனுக்கு பயந்துனை
    காரிருளில் யமுனை
    கடுமழையிலும் கடந்துனை
    கொண்டுசென்ற வாசுதேவனை - வணங்கவேண்டும்.

    செல்ல சேட்டைகளும்
    கள்ள சில்மிஷங்களும்
    விரும்பி செய்யுமுனை
    கொஞ்சி வளர்த்தன்னை
    விளையாடுங் கோபியரை
    காதலுடைராதை பெண்ணை - வணங்கவேண்டும்..

    வீரபல கொண்ட பலராமனும்
    தீயகுணங் கொண்ட மாமனும்
    நேயநயங் கொண்ட வார்தைதனை
    கூறிப்பல ராமனையடக்கி அசுரனை
    கூறாய்கிழித் தெரியும் வீரமதை
    மாமனாகியும் நீசெய்த கம்சவதை - வணங்க வேண்டும்.

    காடுகரடு மேய்ச்சலை
    காணுமாடு கூச்சலை
    தூயநற் குழலூதி மயக்குவனை
    ஊதுதுர் சங்கென போரினை
    நிகழ்த்துமுனை பார்த்த தேரினை
    நிகழ்த்தியவாரே நேர்த்த சாதனை -வணங்கவேண்டும்..

    கரம்ங்கூப்பிய வேண்டுதலை
    தொலைவிருந்தும் தந்தனை
    தொழும்நல் ஒழுக்கசீல பக்தனை
    அழும்நிலை காட்டியதில் ஆட்கொண்டனை
    அவல்தந்த அக்குசேல நண்பனை -வணங்கவேண்டும்

    அகவைகள் இல்லாதோனை
    அனைத்துளும் இருந்தோனை
    அரும்பாடின்றி அடிபணிந் தடைவோனை
    அகத்துள்ளும் புறத்துள்ளும் உள்ளோனை
    அளந்திங்கு அமைப்பான் தோரணை
    அவல்தின்று ஆக்குவான் செல்வனை -வணங்க வேண்டும்..

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728