• Recent posts

    நானும் ஒரு ரீமேக் செய்றேன்..

    நானும் ஒரு ரீமேக் செய்றேன்....

    நல்லதோர் வீணை செய்தே - அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
    சொல்லடி சிவசக்தி - எனைச்
    சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
    வல்லமை தாராயோ, - இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
    சொல்லடி, சிவசக்தி - நிலச்
    சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

    விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்
    வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
    நசையறு மனங்கேட்டேன் - நித்தம்
    நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
    தசையினைத் தீசுடினும் - சிவ
    சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
    அசைவறு மதிகேட்டேன் - இவை
    அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

    லவ் க்கு மாத்தலாம்...

    மின்னுதோர் மேனி கொண்டும் - அதை
    மண்தின்க அழிந்திட விடுவதுண்டோ..
    சொல்லடி என்காதலி ..
    எனை சுழலெனும் காதலில் சிக்க வைத்தாய்.
    நல்விடை கூறாயோ.. இந்த நாயகன் நன்முறை வாழ்ந்திடவே?
    சொல்லடி என் காதலி ...
    எனை விதியென்று நோந்திட செய்வாயோ...

    ...வான்தெரி செங்கதிர்போல. - நெஞசம் வேண்டிடும் பதில்சொல்ல கேட்டேன்..
    நாணறு அம்பினைபோல - நித்தம் உளனுருகு சுகம்தரும் முத்தம் கேட்டேன்..
    உயிர்பிரி தருணமதிலும் - உன் முகத்தை காணுநல் வரங்கேட்டேன்..
    இதமுறு காதல் கேட்டேன்.. இவை தருவதில் உனக்கென்னடி கெடு வந்ததோ...

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728